Wednesday, 20 February 2013

ஸ்பினாச் வடை - Spinach Vadai


ஸ்பினாச் வடை - Spinach Vadai

தேவையான‌ பொருட்க‌ள் 

உளுந்து பருப்பு = ஒரு கப்
ஸ்பினாச் கீரை = அரை கப்
வெங்காயம் = அரை
கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி
கொத்து மல்லி = ஒரு மேசை கரண்டி
பச்சமிளகாய் = ஒன்று
இஞ்சி = ஒரு தேக்கரண்டி (துருவியது)
மிளகு = அரை தேக்கரண்டி ( முக்கால் பாகம் திரித்தது)
உப்பு = முக்கால் தேக்கரண்டி (அ) அவரவர் ருசிக்கு

செய்முறை

1.உளுந்து ப‌ருப்பை ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து த‌ண்ணீரை வ‌டித்து மையாக‌ அரைக்க‌வும்.
2. ஸ்பினாச், கொத்து மல்லி, கருவேப்பிலையை மண்ணில்லாமல் கழுவி நல்ல பைனாக (பொடியாக) அரிந்து வைக்கவும்.
3. அரைத்த‌ மாவில் உப்பு, பொடியாக‌ அரிந்த‌ ஸ்பினாச் (பால‌க்) கீரை பொடியாக‌ அரிந்த‌ ப‌ச்ச‌மிளகாய் , துருவிய‌ இஞ்சி, கொத்து ம‌ல்லி , க‌ருவேப்பிலை மிள‌கு எல்லாம் சேர்த்து ந‌ன்கு கிள‌ற‌வும்.
4. எண்ணையை காய‌ வைத்து வ‌டைக‌ளாக‌ பொரித்து எடுக்க‌வும்.
சுவையான‌ ஸ்பினாச் வ‌டை ரெடி. தொட்டுக்கொள்ள‌ புதினா துவைய‌ல் (அ) பொட்டுக‌ட‌லை துவைய‌ல், நோன்பு க‌ஞ்சிக்கும் பொருந்தும்.

குறிப்பு:
எண்ணையை ரொம்ப சூடு படுத்தி விட்டு வடையை போட்டால் உள்ளே வேகாது, எண்ணை சூடானதும் தீயின் அளவை சிறிது மீடியமாக வைத்து வடையை போட்டு திருப்பியதும் ஒரு முறை கரண்டியால் அமுக்கி விடவும் பிறகு நல்ல வெந்து வரும்.
இஞ்சி மிளகு சேர்வதால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
ந‌ல்ல‌ ஷாஃப்டாகவும் , கிரிஸ்பியாகவும் இருக்கும், இத‌ற்கு சோடா மாவு கூட‌ தேவையில்லை

No comments:

Post a Comment