Tuesday, 26 February 2013

கதம்ப சாதம்

கதம்ப சாதம்:



தேவையான பொருட்கள்:
அரிசி: 1 கிலோ
துவரம் பருப்பு: 250 கிராம்
உளுந்தம்பருப்பு: 50 கிராம்
கடலைபருப்பு: 50 கிராம்
தக்காளி: 250 கிராம்
வெங்காயம்: 250 கிராம்
புளி: 50 கிராம்
காய்ந்த மிளகாய்: 10 கிராம்
முழு மல்லி: கிராம்
மிளகு, சீரகம்: 25 கிராம்
பெருங்காயம்: 5 கிராம்
துருவிய தேங்காய்: 150 கிராம்
காராமணி: 250 கிராம்
கேரட், பீன்ஸ்: 200 கிராம்
சேனை கிழங்கு: 250 கிராம்
கிராம்பு, கடுகு, கருவேப்பில்லை கொஞ்சமாக...


செய்முறை:
   அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், முழு மல்லி, மிளகு, சீரகம், கடலை பருப்பு, இவற்றை அரைத்து மாவாக்கி கொள்ளவும், புலியை கரைத்து கொள்ளவும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். மிச்சமுள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கவும், பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், தேங்காய் துருவல் போட்டு வேக விடவும்.
   வெந்ததும் ஏற்கனவே வெந்து எடுத்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு, கலவையில் போடவும். அதன் மீது தேவையான மசாலா தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி, கடைசியாக நெய் கரைத்து விடவும். இப்போது சுவையான கதம்ப சாதத்தை வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு  பரிமாறவும்.

No comments:

Post a Comment