நெத்திலி மீன் குழம்பு :
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன்
தனியா தூள் – 3 டீ ஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணை ய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகிய வற்றை தாளிக்கவும்.
* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போ ட்டு வதக்கணும்.
* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.
* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்க ளைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.
* காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாரு ங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.
No comments:
Post a Comment