Monday, 29 July 2013

சில்லி சிக்கன் பிரை

சில்லி சிக்கன் பிரை:




தேவையான பொருட்கள்: 



  • கோழி 1 கி
  • பெரிய வெங்காயம் 6
  • மிளகாய் வற்றல் 7
  • தக்காளி 5
  • இஞ்சி, பூண்டு சிறிதளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • கரம் மசாலா
  • டால்டா அல்லது நெய்
  • வினிகர்
  • எலுமிச்சை சாறு
  • வெள்ளரிக்காய்



செய்முறை: 


முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

Monday, 11 March 2013

கோதுமை பிரதமன்.

கோதுமை பிரதமன்.


இதனை செய்வது மிக ஈஸி. மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் கோதுமை பிரதமன் - ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.




தேவையானப் பொருட்கள்:-


  •  கோதுமை ரவை - கால் கப்
  •   பொடித்த வெல்லம் - முக்கால் கப்

  •  கெட்டியான தேங்காய்ப் பால் - 2 கப்
  •        ஏலப்பொடி - கால் டீஸ்பூன்

  •        நெய் - 2 டீஸ்பூன்

  •        முந்திரி - 10.

செய்முறை:-

    கோதுமை ரவையுடன், அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைக்கவும்.
    ரவை வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கொதிக்கும் போது, தேங்காய்ப் பால், ஏலப்பொடி சேர்த்து, ஒரு கொதி வரும் போது அடுப்பை அணைக்கவும்.
    முந்திரிப் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, மேலாகத் தூவவும்.
    இறக்கும் போது தளர இருந்தாலும், ஆறியதும் கெட்டியாகி விடும்.


Tuesday, 5 March 2013

தவா சிக்கன்

 தவா சிக்கன்

அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப் போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவியது)
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வர மிளகாய் – 2
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் – 1 (நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய் ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிள காய் போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயத் தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கன் துண்டுக ளை போட்டு மஞ்சள் தூள், மிளகா ய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும். பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர் த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை சுமார் 3-4 நிமிடம் கிளற வேண் டும். இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும். ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும். இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும். இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Thursday, 28 February 2013

பிரட் பிஸ்ஸா

பிரட் பிஸ்ஸா:


தேவையான பொருட்கள்:


  •     பிரட் – 6 ஸ்லைஸ்
  •     தக்காளி சாஸ் / பாஸ்தா சாஸ் / கெட்ச் அப் – 1/2 கப்     (tomato sauce/ pasta sauce/ ketchup)

  •     ஆலப்பேன்யோ துண்டுகள் - காரம் தேவைக்கேற்ப(pickled jalapeno pepper slices)

  •     உப்பு – தேவையான அளவு
  •     துருவிய மொஸரெல்லா சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:


        பிரட்டில் லேசாக வெண்ணெய் தடவி, தோசைக் கல்லில் அல்லது ஓவனில் வைத்து டோஸ்ட் செய்யவும். பிரட்டின் இருபுறமும் திருப்பிவிட்டு, லேசான பொன்னிறமாக டோஸ்ட் செய்து, பிரட் துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.
        பிரட்டின் மீது சிறிது தக்காளி சாஸ்/ பாஸ்தா சாஸ்/ கெட்ச்அப் வைத்து, தட்டையான கரண்டியால் சாஸ் பிரட் முழுவதும் பரவும்படி தேய்த்து விடவும். (நான் பாஸ்தா சாஸ் பயன்படுத்தி செய்தேன்.)
        இதன் மீது தேவையான அளவு ஆலப்பேன்யோவை துண்டுகளாக நறுக்கி மேலே தூவி நிரப்பவும்.
        தேவையான அளவு உப்பை மேலே தூவிக் கொள்ளவும்.
        கடைசியாகத் துருவிய சீஸை மேலே பரவலாகத் தூவி விடவும்.
        இதே போல் எல்லா பிரட் துண்டுகளுக்கும் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
        ஓவனை 250 ° – ல் வைத்து ப்ரீ-ஹீட் செய்யவும். (5 நிமிடங்கள்)
        ஓவனில் கவனமாக பிரட் துண்டுகளை வரிசையாகப் பரப்பி வைக்கவும். 5 நிமிடங்கள் வரை பேக் செய்து பின் வெளியே எடுக்கவும்.

(சீஸ் நன்றாக உருகிய பின் வெளியே எடுக்கவும்.)

    சூடாகப் பரிமாறவும்.


    பருப்பு புளி மசியல்



    பருப்பு புளி மசியல்:

                                    


    தேவையானப்பொருட்கள்:

    துவரம் பருப்பு - 1/4 கப்
    பயத்தம் பருப்பு - 1/4 கப்
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
    உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

    தாளிக்க:

    எண்ணை - 1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
    பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது

                                                                   
    செய்முறை:

    புளியை ஊற வைத்துக் கரைத்து, தேவையான நீரைச் சேர்த்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும். துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போடவும். அத்துடன் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து அத்துடன் புளித்தண்ணீரையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்துள்ளப் பருப்பை மசித்து சேர்க்கவும். மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்

    சூடான சாதத்துடன் பரிமாறவும்.

                                                 

    அவல் சப்பாத்தி


    அவல் சப்பாத்தி:

    தேவையானவை:

    சுத்தம் செய்யப்பட்ட அவல் = அரை கப்
    புளித்த தயிர் = ஒரு கப்
    கோதுமைமாவு = ஒரு கப்
    மிளகுத்தூள் = ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் = அரை டீஸ்பூன்
    உப்பு = தேவைக் கேற்ப
    எண்ணெய் அல்லது நெய் = தேவைக்கேற்ப.

    செய்முறை:
     அவலுடன் ஒரு கப் தயிர், உப்பு சேர்த்து கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு அக் கலவையுடன் உப்பு, கோதுமைமாவு, மிளகாய்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

    அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாகத் தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய்விட்டு சுட்டு எடுக்கவும். சைட்&டிஷ் ஆக ‘தால்’ ஏற்றது. இந்த சப்பாத்தி சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

    அவல் சப்பாத்தி: கோதுமை மாவுக்கு பதிலாக கேழ்வரகுமாவை சேர்த்து சப்பாத்தி செய்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இன்னும் மிருதுவாகவும் இருக்கும்.

    நெத்திலி மீன் குழம்பு :


     நெத்திலி மீன் குழம்பு :




    தேவையான பொருட்கள்:












    நெத்திலி மீன் – 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு
    தக்காளி – 3
    மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
    மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன்
    தனியா தூள் – 3 டீ ஸ்பூன்
    புளி – ஒரு எலுமிச்சை அளவு
    எண்ணை – ஒரு குழிக்கரண்டி
    கடுகு – ஒரு டீ ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் – 2
    கறிவேப்பிலை – ஒரு கொத்து
    வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
    உப்பு – தேவைக்கேற்ப

    செய்முறை:
    * நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணை ய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகிய வற்றை தாளிக்கவும்.
    * வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போ ட்டு வதக்கணும்.
    * பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.
    * குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்க ளைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.
    * காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாரு ங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.